• Login
Sunday, July 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜாலான் துன் ரசாக் மரம் விழுந்த விபத்து: சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் பரிதாபமாக பலி; மற்றொரு காரில் இருந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 19, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜாலான் துன் ரசாக் மரம் விழுந்த விபத்து: சிகிச்சை பலனின்றி ஓட்டுநர் பரிதாபமாக பலி; மற்றொரு காரில் இருந்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கோலாலம்பூர், ஜாலான் துன் ரசாக் (Jalan Tun Razak) பகுதியில் நேற்று இரவு கார் மீது மரம் விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 43 வயது ஓட்டுநர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.

விபத்தில் சிக்கிய முகமது அமீர் ஷாஸ்வான் சாயோன் (Mohd Amir Shazwan Saion) என்ற அந்த 43 வயது நபருக்கு இரு கைகளிலும் பலத்த காயம் மற்றும் நெஞ்சுப் பகுதியில் உட்புற ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. கோலாலம்பூர் மருத்துவமனையில் (HKL) தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று அதிகாலை 4 மணியளவில் உயிரிழந்தார் என்று, டாங் வாங்கி மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் சசாலீ ஆதாம் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த போது அந்தப் பிரம்மாண்ட மரம், 2 மாதக் குழந்தை முதல் 57 வயது முதியவர் வரை மொத்தம் 7 பேர் பயணித்த மற்றொரு காரின் மீதும் விழுந்ததில், குறித்த கார் சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரில் இருந்த 7 பேருக்கும் வெளிப்புறக் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், முன்னெச்சரிக்கை பரிசோதனைக்காக அவர்கள் அனைவரும் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நள்ளிரவு 10.20 மணியளவில் சிங்கப்பூர் தூதரகம் அருகே நிகழ்ந்த இந்த விபத்தினால் ஜாலான் துன் ரசாக்கில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) ஊழியர்கள் மற்றும் தீயணைப்புப் படையினர் நள்ளிரவுக்கு மேல் மரத்தை வெட்டி அகற்றி, சேதமடைந்த வாகனங்களை மீட்ட பிறகு போக்குவரத்து வழக்கம் போல் சீரானது.

முன்னதாக, வாகனங்கள் சென்று கொண்டிருந்த போதே இந்த மரம் திடீரென சாலையில் சரிந்து விழும் திடுக்கிடும் டேஷ்கேம் காட்சிகள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மாதாந்திர வருமான திட்டம் vs மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.. ரூ.5 லட்சம் முதலீடு.. எதில் அதிக வருமானம் கிடைக்கும்? | MIS vs SCSS | வணிகம் போட்டோகேலரி

Next Post

’எதிர்கால கல்வித் திட்டங்களில் தொழிற்கல்விக்கு முன்னுரிமை செலுத்தவேண்டும்’

Next Post
’எதிர்கால கல்வித் திட்டங்களில் தொழிற்கல்விக்கு முன்னுரிமை செலுத்தவேண்டும்’

’எதிர்கால கல்வித் திட்டங்களில் தொழிற்கல்விக்கு முன்னுரிமை செலுத்தவேண்டும்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin