இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தில்லி மதுபான (கலால்) கொள்கை ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் கடந்த மாா்ச் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தில்லி திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருந்தார்.
மக்களவைத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்பதற்காக கேஜரிவாலுக்கு ஜூன் 1-ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் வழங்கியது. இந்த நிலையில் இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
உடல் பரிசோதனை செய்யவிருப்பதால் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கக் கோரி மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூன் 2ஆம் தேதி சரணடைய உத்தரவிட்டிருந்த நிலையில் ஜாமீனை நீட்டிக்கக் கோரி கேஜரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

