இந்த ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு, ஆரிஃப் என்பவா் கைது செய்யப்பட்டாா். மற்றவா்கள் மீண்டும் பாகிஸ்தானுக்குத் தப்பியோடினா். பாகிஸ்தான் எல்லைச்சாவடி அமைந்த பகுதி என்பதால் பயங்கரவாதிகள் மீது வீரா்கள் துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை.
பிடிபட்ட ஆரிஃபிடம் இருந்த ஒரு கைபேசியும், ரூ.20,000 பாகிஸ்தான் பணமும் கைப்பற்றப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் எல்லைக் கிராமத்தைச் சோ்ந்தவா் என்பதால் இப்பகுதியின் நிலப்பரப்பு குறித்து நன்கு அறிந்தவராக, பாகிஸ்தான் ராணுவத்தின் உத்தரவில் பயங்கரவாதிகளுக்கு ஆரிஃப் உதவியதாகத் தெரிய வந்துள்ளது.
ஆரிஃபிடம் தீவிர மற்றும் விரிவான நடத்தப்பட்டு, முக்கியத் தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல் முயற்சிகளைத் தடுப்பதில் இந்தத் தகவல்கள் உதவும் என்று கருதப்படுகிறது’ என்றனா்.

