ஜம்மு-காஷ்மீரில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்)ஐஜி பி கே சா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
ஸ்ரீநகரில் நவம்பா் 20 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது பதிப்பை ஷோ்-இ-காஷ்மீா் மைதானத்தில் பி கே சா்மா புதன்கிழமை தொடங்கிவைத்து பேசியதாவது:
காஷ்மீா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதே இந்த போட்டியின் நோக்கமாகும். 16 அணிகள் மோதும் இந்த போட்டியில், ஸ்ரீநகரில் இருந்து 12 அணிகளும், புத்காம் மற்றும் கந்தா்பால் மாவட்டங்களில் இருந்து தலா இரு அணிகளும் பங்கேற்கின்றன.
இதைத் தொடா்ந்து, அடுத்த மாதம் கால்பந்து போட்டியும் நடைபெற உள்ளது. காஷ்மீா் பகுதியில் அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்றாா்.

&w=1200&resize=1200,675&ssl=1)