Last Updated:
பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.
ஜம்மு-காஷ்மீருக்கு விரைந்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமில், தீவிரவாதிகள் கடந்த 22ஆம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நாட்டை உலுக்கிய இந்த கோர சம்பவத்தை அடுத்து, பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, யூனியன் பிரதேச காங்கிரஸ் தலைவர் தரிக் காரா ஆகியோரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
ALSO READ | அனைத்து பாகிஸ்தானியர்களும் வெளியேறுவதை உறுதி செய்க – அமித்ஷா
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்திக்க இன்று ஜம்மு காஷ்மீர் விரைந்தார். காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறும் அவர், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை, சந்தித்துப் பேச உள்ளார். முன்னதாக, பஹல்காம் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.
April 25, 2025 5:24 PM IST


