• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா | Tourism should be treated as a conflict neutral activity Omar Abdullah after Pahalgam Cabinet meet

GenevaTimes by GenevaTimes
May 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மீண்டும் மீண்டும் அரசியலில் சிக்குகிறது: உமர் அப்துல்லா | Tourism should be treated as a conflict neutral activity Omar Abdullah after Pahalgam Cabinet meet
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஹல்காம்: “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும்” என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், “சுற்றுலா என்பது மோதல்களுக்கு இடமில்லாத ஒரு செயலாக இருக்க வேண்டும். சுற்றுலா என்பது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான ஒரு வழியாகும். மீண்டும் மீண்டும் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா அரசியலில் சிக்குகிறது. ஜம்மு காஷ்மீர் எதிர்கொள்ளும் சூழ்நிலையிலிருந்து சுற்றுலாத் துறை தனிமைப்படுத்தப்படுவதை எனது அரசு உறுதி செய்யும். சுற்றுலாவை வேறு எதையும் விட முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக அனைவரும் பார்க்க வேண்டும்.

கடந்த ஐந்து முதல் ஆறு வாரங்கள் நாட்டுக்கு எளிதானவை அல்ல. ஆனால் ஜம்மு – காஷ்மீர் மிகவும் பாதிக்கப்பட்டது. அரசு இதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். இருப்பினும் அதற்கு மத்திய அரசின் ஆதரவும் தேவைப்படும். பைசரன் தாக்குதலுக்குப் பிறகு, சில இடங்களுக்கு பாதுகாப்பு தணிக்கைகள் தேவை என்றும், அவை மெதுவாகத் திறக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அவை மெதுவாக மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன், குறிப்பாக பஹல்காம் பூங்காக்கள் திறக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர், “ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்த சுற்றுலா அமைச்சகத்தின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே தலைமை தாங்கினார். இரண்டு நாட்களுக்கு முன்பு, நிதி ஆயோக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். காஷ்மீரில் சுற்றுலா மீண்டு வருவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் அவர் எங்களை ஆதரிப்பதாகவும் அடையாளம் கண்டுள்ளதாகவும் உறுதியளித்தார்.

கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் நாங்கள் அச்சுறுத்தப்படவில்லை. அமைதியின் எதிரிகள் ஒருபோதும் நமது உறுதியை குலைக்க மாட்டார்கள். ஜம்மு – காஷ்மீர் உறுதியாகவும், வலுவாகவும், அச்சமின்றியும் நிற்கிறது. காஷ்மீருக்கும் பஹல்காமுக்கும் மெதுவாகத் திரும்பி வரும் அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் நன்றி தெரிவிக்கவும் நாங்கள் இங்கு வந்துள்ளோம்.

சமீபத்திய தாக்குதல் நம் நம்பிக்கையை உலுக்கியது. ஆனால், இப்போது இயல்பு நிலை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இப்போது பயம் குறைந்து வருகிறது. 400 முதல் 500 சுற்றுலாப் பயணிகள் இருந்த குல்மார்க்கில் இருந்து நான் இப்போதுதான் வந்தேன். பஹல்காம் மீண்டும் இயக்கத்தைக் காண்கிறது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வரவேண்டும்.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வெளியிடப்பட்ட சர்வதேச பயண கட்டுப்பாடுகளை நீக்குமாறு வெளியுறவு அமைச்சகத்தை வலியுறுத்துகிறேன். இப்போது அமைதி நிலவுகிறது, மேலும் வெளிநாடுகளில் உள்ள மக்களும் இந்த நிலத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள். வரவிருக்கும் அமர்நாத் யாத்திரையில் நம்பிக்கை வைத்துள்ளேன். இந்த யாத்திரை பல தலைமுறைகளாக நடைபெற்று வருகிறது. அப்போது யாத்ரீகர்கள் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள். இந்த நிலத்தின் அழகின் செய்தியை அவர்கள் பரப்புவார்கள் என்று நம்புகிறேன்” என்று உமர் அப்துல்லா கூறினார்.



Read More

Previous Post

’இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயார்’

Next Post

“வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் உடன் ஒப்பிடாதீர்” – ஸ்டீவ் வாஹ் சொல்லும் காரணம் | dont compare vaibhav suryavanshi with sachin tendulkar says steve waugh

Next Post
“வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் உடன் ஒப்பிடாதீர்” – ஸ்டீவ் வாஹ் சொல்லும் காரணம் | dont compare vaibhav suryavanshi with sachin tendulkar says steve waugh

“வைபவ் சூர்யவன்ஷியை சச்சின் உடன் ஒப்பிடாதீர்” - ஸ்டீவ் வாஹ் சொல்லும் காரணம் | dont compare vaibhav suryavanshi with sachin tendulkar says steve waugh

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin