• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்முவில் புறாவின் காலில் கட்டப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம்… உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர்…! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 24, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்முவில் புறாவின் காலில் கட்டப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம்… உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர்…! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 24, 2025 4:56 PM IST

பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் புறா, ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 9 மணியளவில் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rapid Read
News18News18
News18

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஜம்மு மாவட்டத்தில் உள்ள RS புரா பகுதியில் ஒரு புறாவை பாதுகாப்புப் படையினர் பிடித்து, அதன் பாதத்தில் கட்டப்பட்டிருந்த மிரட்டல் கடிதத்தைக் கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில் ஜம்மு ரயில் நிலையத்தில் IED குண்டுவெடிப்பு நடத்தப்படும் என்ற அச்சுறுத்தல் செய்தி இருந்தது.

பாகிஸ்தானில் இருந்து வந்ததாக நம்பப்படும் புறா, ஆகஸ்ட் 18ஆம் தேதி இரவு 9 மணியளவில் சர்வதேச எல்லையில் உள்ள காட்மரியா பகுதியில் இருந்து பிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பாதுகாப்புப் படையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியதுடன், முழுப் பகுதியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு ரயில் நிலையம் வெடிகுண்டு வீசி தகர்க்கப்படும் என்ற செய்தியுடன் கூடிய ஒரு குறிப்பு புறாவின் காலில் கட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அந்தக் குறிப்பில் காஷ்மீர் சுதந்திரம் அடையும் நேரம் வந்துவிட்டதாகவும், ஜம்மு ரயில் நிலையத்தில் குண்டுவீசப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த அச்சுறுத்தல் செய்தி உருது மற்றும் ஆங்கிலத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த காலங்களில் பாகிஸ்தானில் இருந்து எல்லையைத் தாண்டி பலூன்கள், கொடிகள் மற்றும் புறாக்கள் மூலம் செய்திகள் அனுப்பப்பட்டன. ஆனால், புறா மூலம் இவ்வளவு கடுமையான அச்சுறுத்தல் வருவது இதுவே முதல்முறை. எனவே, பாதுகாப்புப் படையினர் இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜம்மு ரயில் நிலையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு அச்சுறுத்தலையும் சமாளிக்க, போலீசார் நாய் படைகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மிரட்டலை அடுத்து ரயில்வே பகுதியில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்ளூர் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர ரயில் தண்டவாளங்கள், ரயில் நிலைய வளாகங்கள் மற்றும் நெரிசலான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: காசி விஸ்வநாதர் கோயிலின் தங்க கோபுரத்தில் வந்து அமர்ந்த அரிய வெள்ளை ஆந்தை…! வைரலாகும் வீடியோ…

இதற்கிடையில், “இதுபோன்ற சம்பவங்களை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது” என்று பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். “அந்தப் புறாவுக்கு எல்லைக்கு அப்பாலில் இருந்து சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் இந்த மிரட்டல் செய்தி போலியானதா அல்லது திட்டமிட்ட சதித்திட்டமா என்பதை பாதுகாப்பு அமைப்புகள் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 24, 2025 4:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஜம்முவில் புறாவின் காலில் கட்டப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம்… உஷார் நிலையில் பாதுகாப்புப் படையினர்…!

Read More

Previous Post

வாட்ஸ்அப்பில் வந்த திருமண அழைப்பிதழால் பல லட்சம் ரூபாயை இழந்த ஊழியர்

Next Post

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி | Messi Argentina football team to visit Kerala in November full details

Next Post
மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி | Messi Argentina football team to visit Kerala in November full details

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளா வருகை: முழு பின்னணி | Messi Argentina football team to visit Kerala in November full details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin