Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை
Tamil Live Breaking News : சென்னை விமான நிலையத்தில் பச்சோந்திகள் மீட்பு
தாய்லாந்து நாட்டிலிருந்து விமானத்தில்,சென்னைக்கு கடத்தி வந்த 402 பச்சோந்திகளை, சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.
Tamil Live Breaking News : சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு
3 புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
Tamil Live Breaking News : ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பான் நாட்டின் ஒகசவரா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒகசவரா தீவுகளிலிருந்து சுமார் 530 கி.மீ ஆழத்தில் காலை 5.02 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவு கோளில் 6.3ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இந்த சம்பவத்தால் உயிரிழப்புகளோ, காயமடைந்தவர்களோ யாரும் இல்லை என முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
Tamil Live Breaking News : ராகுல் காந்தி இன்று மணிப்பூர் செல்கிறார்
கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இன்று மணிப்பூர் செல்கிறார் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மாநிலத்திற்கு செல்லவும் ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Live Breaking News : நீட் வழக்குகள் : உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
இளங்கலை நீட் தேர்வு கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தலைமை நீதிபதி சந்தரசூட் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளது.
Tamil Live Breaking News : பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்
இரண்டு நாள் பயணமாக இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல்முறையாக ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி.
Tamil Live Breaking News : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவு
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
வாக்குப்பதிவு வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மாலை 6 மணிக்கு பிறகு வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Tamil Live Breaking News : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை நீலகிரி, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், தென்காசி,திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
