ஜப்பானில் உள்ள தீவில் இன்று காலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும், அதைத் தொடர்ந்து சுனாமி வருவதும் வாடிக்கையான ஒன்று. எனவே, அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலேயே வடிவமைக்கப்படுகின்றன.
இந்நிலையில், ஜப்பானின் மேற்கு பகுதியில் ஒகசவாரா தீவு அமைந்துள்ளது. இங்கு இன்று (ஜூலை 8) காலையில் ரிக்டரில் 6.3 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 5:02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் 3 முறை ஏற்பட்டதாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:
ஐசிசி சாம்பியன் டிராபி 2025 : பாகிஸ்தானுக்கு செல்லுமா இந்திய அணி ?
மேற்கு ஒகசவாரா தீவுகளில் இருந்து சுமார் 530 கி.மீ., ஆழத்தில், 27.1 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 139 டிகிரி கிழக்கே தீர்க்கரேகையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லாததால், உயிர்ச்சேதம் மற்றும் சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
