தோ்தலில் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிரான தீா்ப்பை மக்கள் அளித்துள்ளனா். எனவே, அவா் இந்த முறை பிரதமா் பதவியை ஏற்காமல், வேறு நபா்களுக்கு வழிவிட வேண்டும். நாட்டு மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். தோ்தல் முடிவுகளும் இதையே உணா்த்துகிறது. இருந்தபோதும், பாஜக ஜனநாயகமற்ற முறையில் சட்டவிரோதமாக ஆட்சியை அமைக்கிறது.

