• Login
Saturday, December 27, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சொத்து மதிப்பு எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையை விளக்கும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்! | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 17, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
சொத்து மதிப்பு எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையை விளக்கும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்! | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 17, 2025 7:03 AM IST

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட குடியிருப்பு நெருக்கடியையும் அவர் குறிப்பிட்டார். அங்கு 2007 மற்றும் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விலைகள் 19 சதவீதம் சரிந்தன.

Rapid Read
News18
News18

பெரும்பாலான இந்தியர்கள் நகரத்திலோ அல்லது கிராமத்திலோ சொத்து வாங்குவதைத்தான் முக்கியமான முதலீடாக கருதுகிறார்கள். இதன் விலை எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என்பது அவர்களது கணிப்பு. ஆனால், இது உண்மையா? சொத்தின் விலைகள் என்றென்றும் உயராது என்றும், அடிப்படைகள் பலவீனமடையும் போது மிகப்பெரிய பொருளாதார வளம் மிக்க நாடுகள் கூட ரியல் எஸ்டேட் சரிவுகளைக் கண்டுள்ளன என்றும் ரியல் எஸ்டேட் ஆலோசகர் ராஜ்தீப் சவுகான் எச்சரிக்கை விடுக்கிறார்.

“உங்கள் உறவினர் 2007-ல் ஒரு பிளாட் வாங்கினார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இன்னும் அதில் லாபம் அடைவதற்காக காத்துக்கொண்டிருக்கிறார் என்பதே உண்மை” என்ற உதாரணத்துடன் தனது பதிவைத் தொடங்குகிறார் சௌஹான். அவர் சொல்ல வருவது இதுதான். சொத்து வாங்குவது எப்போதும் லாபத்தைத் தராது. இதிலுள்ள அபாயங்களை மக்கள் புறக்கணிக்கும்போது என்ன நடக்கும் என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

ஜப்பான், அமெரிக்கா மூலம் கிடைத்த படிப்பினை…

1980-களின் பிற்பகுதியில் செழிப்பான ரியல் எஸ்டேட் சந்தையாக இருந்த ஜப்பான், வரலாற்றின் மிகப்பெரிய சரிவுகளில் ஒன்றாக எவ்வாறு முடிந்தது என்பதை சௌஹான் தனது பதிவில் பகிர்ந்து கொண்டார். “1989-ம் ஆண்டில், ஜப்பானின் ரியல் எஸ்டேட் சந்தை மதிப்புமிக்கதாக இருந்தது. டோக்கியோவில் உள்ள இம்பீரியல் அரண்மனையின் கீழ் உள்ள நிலம் கலிபோர்னியா முழுவதையும் விட அதிகமான மதிப்புடையதாக இருந்தது. பின்னர் அது சரிந்தது. 2001 வாக்கில் அதன் நில மதிப்புகள் 70 சதவீதம் சரிந்தன. 1989-ல் உச்சத்தில் இருந்த போது அங்கு சொத்து வாங்கியவர்கள் இன்னும் படுகுழியில் உள்ளனர்” என்று அவர் லிங்க்ட்இன் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட குடியிருப்பு நெருக்கடியையும் அவர் குறிப்பிட்டார். அங்கு 2007 மற்றும் 2009-க்கு இடைப்பட்ட காலத்தில் சொத்து விலைகள் 19 சதவீதம் சரிந்தன. “2009ஆம் ஆண்டில் மட்டும் 2.8 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வீட்டு உரிமையாளர்கள் தங்கள் முதலீடுகளை மீட்டெடுக்க ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை காத்திருந்தனர்” என்று அவர் கூறுகிறார்.

இந்தியா ஏன் வேறுபட்டது?

இதுபோன்ற எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இந்தியா தற்போது ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஆதரிக்கும் வலுவான அடிப்படைகளைக் கொண்டுள்ளது என்றும், நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, கட்டுப்படுத்தப்பட்ட ஊகம் மற்றும் சீரான விநியோக-தேவை போன்ற காரணிகள் தொடரும் வரை, இந்திய ரியல் எஸ்டேட் சந்தை வலுவாக இருக்கும் என்று சவுகான் குறிப்பிடுகிறார்.

“26 சதவீத அலுவலக காலியிடங்களுடன் சீனா எப்படி இருக்கிறது என்று கேளுங்கள். 1990 எப்படி இருந்தது என்று ஜப்பானிடம் கேளுங்கள். 2007-ல் வீடு வாங்கிய அமெரிக்கர்களிடம் கேளுங்கள். அடிப்படைகள் சீரமைக்கப்படும்போது, ​​நீங்கள் நன்றாக லாபம் ஈட்டுகிறீர்கள். அவை சீரமைக்கப்படாதபோது, நீங்கள் மற்றவர்களுக்கு உதாரண கதையாகிவிடுவீர்கள்” என்கிறார் சவுகான்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 17, 2025 7:03 AM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

சொத்து மதிப்பு எப்போதும் ஏறிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறீர்களா? உண்மையை விளக்கும் ரியல் எஸ்டேட் ஆலோசகர்!

Read More

Previous Post

2-வது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மோசமான ஆட்டம்: முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி | South Africa won First Test Cricket against Indian Team

Next Post

செவ்வாய்கிழமையில் கடன் வாங்கக் கூடாது…

Next Post
செவ்வாய்கிழமையில் கடன் வாங்கக் கூடாது…

செவ்வாய்கிழமையில் கடன் வாங்கக் கூடாது…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin