Last Updated:
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துப் பட்டியலை பொதுவெளியில் வெளியிட முடிவெடுத்துள்ளனர்.
தங்களது சொத்துப் பட்டியலை பொதுவெளியில் வெளியிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
அண்மையில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக தீப்பிடித்து எரிந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் குறித்து நீதித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பணம் தீப்பிடித்த விவகாரத்தில், எரிந்த பணம் தனக்கு சொந்தமானது இல்லை என்று யஷ்வந்த் வர்மா மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் சில முன்னெடுப்புகள் செய்வது குறித்து டெல்லியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில், நீதிபதிகளின் சொத்து பட்டியலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட இருக்கும் விவரங்கள் உச்சநீதிமன்ற இணையதளத்திலும் பதிவேற்றப்பட இருக்கிறது.
ஏற்கனவே சொத்துப்பட்டியல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சமர்பிக்கப்பட்டுள்ளபோதும், அது பொதுவெளியில் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த சூழலில் நீதிபதிகளின் சொத்து பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
April 05, 2025 3:22 PM IST


