மன்னர் காலத்தில் தொடங்கிய இந்த சேவல்சண்டை தமிழரின் கலாச்சாரமாக இன்றளவும் பொங்கல் நாட்களில் தொடந்துநடைப்பெற்று வருகிறது. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி,கரூர், அரவக்குறிச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சேவல் சண்டை போட்டி பிரபலமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கத்தி கட்டி சேவல்களை மோதவிடுவதால் சேவல்கள் அதிகம் இறக்க நேரிடுவதோடு, ரத்தகரையோடு சண்டை நடத்தப்படுவதால் அதற்கு மிருகவதை எதிர்ப்பு எழும்பவே கத்தி கட்டி சண்டையிடும் முறைக்கு அரசாங்கம் தடைவிதித்தது.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் அந்தந்தமாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி தற்போது சேவல் சண்டை போட்டி கத்திகட்டப்படாத வெற்றுக்கால் சேவல் சண்டைபோட்டியாக நடத்தப்பட்டு வருகிறது. சண்டைசேவலை பெட்டைகோழியுடன் இணையவைத்து முட்டையிலிருந்து வெளிவரும் போதே குஞ்சுபருவத்திலேயே சண்டை சேவலை பிரித்தெடுத்து மற்ற கோழிகளுடன் சேரவிடாமல் எப்போதும் தனியாக கூண்டில் வைத்து பராமரித்து வருகின்றனர்.
நூரி, ஜாவா, சீத்தா, யாகூத்து, ஜகரியாகூத்து, தும்மரியாகுத்து, ஜரிதியாபிகா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட சண்டைச்சேவல் வகைகள் உள்ளன. போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு எந்த சேவலுடன் எந்த சேவலை மோதவிடுவது என்பது தீர்மானிக்கப்படுகிறது. இது ஜோடி சேர்த்தல் என்று அழைக்கப்படுகிறது. சேவல்களின் உயரம், வலு போன்றவற்றை அடிப்படையாக கொண்டுஅப்போதிருந்தே சண்டை சேவல்களுக்கு காலை, மாலை என இருவேளைகளில் பாதாம் பருப்பு உணவாக கொடுக்கப்படுகிறது.
மேலும் பிஸ்தா, பேரீச்சம்பழம், தேன் ஆகியவற்றை கலந்து உருண்டையாகப் பிடித்தும் தினந்தோறும் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களும் அரைத்து தோசைக்கல்லில் வைத்து சுட்டுகொடுக்கிறார்கள். சேவல்களுக்கு சூடு, ஒத்தடம் செய்து பராமரிக்கிறார்கள். இவை தவிர உடற்பயிற்சியும், நீச்சல் பயிற்சி என மாறிமாறி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில்பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை உள்ளிட்டவை நடத்தப்பட்டு வந்தன. ஆனால், விலங்கினங்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, சேவல் சண்டை பல ஆண்டுகளாகத் தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, சேவல் சண்டையை நடத்தக் கோரி, புதுச்சேரியைச் சோ்ந்தவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அதன்படி, சில நிபந்தனைகளுடன் சேவல் சண்டையை நடத்த உயா் நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் வெற்றுக்கால்களுடன் சேவல் சண்டைநடைபெற்றது. இதில், தமிழகம், புதுவை, கேரளம், கா்நாடகம், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான சேவல்கள் பங்கேற்றன. சேவல் சண்டைப் போட்டிகளை சின்னத்தம்பி ஏற்பாடு செய்திருந்தாா். சேவல் சண்டைபோட்டியில் வென்ற சேவல் உரிமையாளா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
