விவசாய பயிர்களுக்கு அச்சுறுத்தல்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி காளாப்பூரில் உள்ள விவசாயிகளை சந்தித்த கல்லூரி மாணவிகள், அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதை சரி செய்வதற்கான செயல்முறைகளை விளக்கினர். காளாப்பூரில் அதிகபட்சமாக நெல், தென்னை மற்றும் வாழையை விதைத்துள்ளனர். விவசாயிகள் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தென்னை மரத்தை தாக்கும் வெள்ளை ஈக்களும், காண்டாமிருக வண்டு மற்றும் நெற்பயிர்களை தாக்கும் வெளிநாட்டு பறவைகள் (பெலிக்கான்) போன்றவை. இவற்றின் தாக்கத்தால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.

