கோலாலம்பூர்:
பேராக் மந்திரி பெசார் டத்தோ’ ஸ்ரீ சாரானி முகமட் அவர்களின் படம் மற்றும் குரல் பதிவுகள், போலி டிக்டாக் (TikTok) கணக்குகளில் பயன்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தில் (MCMC) புகார் அளித்துள்ளார்.
அவரது படத்தையும் குரலையும் AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்களில் பயன்படுத்தி, பண பரிசுகளை வழங்குவதாகவும், குறிப்பிட்ட தொலைபேசி எண்களுக்கு அழைக்குமாறு மக்களை தூண்டுவதாகவும் சில பொறுப்பில்லாத தரப்புகள் வீடியோக்களை பகிர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“நேற்று மதியம் முதல், எனது படம் மற்றும் குரலை AI தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி போலி TikTok கணக்குகளை உருவாக்கியுள்ளார்கள் என்ற புகார்கள் பல வந்துள்ளன.
உதாரணமாக அரசாங்கத்தின் எந்தவொரு உதவியும் மாநில மந்திரி பெசாரின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசின் அதிகாரப்பூர்வ தளங்களின் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும்.
டிஜிட்டல் மோசடிகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம்,” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் ஏற்கனவே MCMC உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது என்றும், பொதுமக்கள் இத்தகைய போலி கணக்குகளை கண்டறிந்தால் உடனடியாக புகாரளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.




