• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செயற்கை நுண்ணறிவு மூலம் வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு | Tax evasion detection through AI

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
செயற்கை நுண்ணறிவு மூலம் வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு | Tax evasion detection through AI
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஹைதராபாத்: வீடு, மனை போன்ற சொத்துகளை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம், மூலதன ஆதாயம் என்று அழைக்கப்படுகிறது. அதாவது 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டை ரூ.30 லட்சத்துக்கு வாங்கிய ஒருவர், தற்போது ரூ.80 லட்சத்துக்கு விற்கிறார் என்றால் அவருக்கு ரூ.50 லட்சம் லாபம் கிடைக்கிறது. இந்த மூலதன ஆதாயத்துக்கு அவர் வரி செலுத்த வேண்டும்.

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவர் கடந்த 2002-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஒரு வீட்டை வாங்கினார். இந்த வீட்டை அவர் தற்போது ரூ.1.4 கோடிக்கு விற்பனை செய்தார். இந்த சொத்து விற்பனைக்கு அவர் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டும்.

ஆனால் வரியை செலுத்த விரும்பாத அவர், வருமான வரி கணக்கு தாக்கலில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டு, போலியான ஆவணங்களை சமர்ப்பித்தார். அதாவது வீட்டை மேம்படுத்த ரூ.68.7 லட்சம் செலவிட்டதாகவும் தனக்கு மூலதன ஆதாயமாக ரூ.24,774 மட்டுமே கிடைத்தது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். வீட்டின் மேம்பாட்டு பணிக்காக செலவிட்ட தொகைக்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.

வருமான வரித் துறை அதிகாரிகள், இந்த ஆவணங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது கடந்த 2002 ஜூலை 6-ம் தேதியிட்ட ஓர் ஆவணம் போலியானது என்பதை ஏஐ தொழில்நுட்பம் காட்டிக் கொடுத்தது. அந்த ஆவணத்தில் காலிப்ரி எழுத்துரு பயன்படுத்தப்பட்டு இருந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்தான் காலிப்ரி எழுத்துரு பயன்பாட்டுக்கு வந்தது.

அதற்கு முன்பு 2002-ம் ஆண்டில் காலிப்ரி எழுத்துருவில் ஆவணத்தை தயார் செய்திருக்க முடியாது என்று ஏஐ சுட்டிக் காட்டியது.

இதை ஆதாரமாக வைத்து ஹைதராபாத் நபரிடம் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரால் அசல் ஆவணத்தை சமர்ப்பிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து புதிதாக வருமான வரி கணக்கை தாக்கல் செய்த அவர், மூலதன ஆதாய வரியை செலுத்தினார்.



Read More

Previous Post

இங்கிலாந்து வீராங்கனையுடன் மோதல்: பிரதிகா ராவலுக்கு அபராதம் | Pratika Rawal fined, England penalised for slow over rate in first ODI

Next Post

நாய் மீது மோதியதால் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி மரணம் | Makkal Osai

Next Post
நாய் மீது மோதியதால் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி மரணம் | Makkal Osai

நாய் மீது மோதியதால் கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளோட்டி மரணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin