செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்று 12 மனித என்புக்கூடுகள் அடையாளம்
காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு
பணிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்
ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து
எடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில்
334 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

