Last Updated:
மேற்கு கடற்கரை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் மாதத்தில் அதிகப்படியான மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செப்டம்பர் 2025 மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு, வழக்கமான நீண்ட கால சராசரியை விட 109% அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான அளவை விட அதிக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு மற்றும் இமயமலைப் பகுதிகளில் பெய்யும் அதிக மழையின் காரணமாக, உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இந்த மாநிலங்களில் பல ஆறுகள் நிரம்பி வழிந்தன என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, மேற்கு கடற்கரை மாநிலங்கள், வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு மற்றும் தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அடுத்தடுத்த நாட்களில் வரும் வானிலை தகவல்களின் அடிப்படையில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை ஓரளவு அறிந்துகொள்ளலாம்.
August 31, 2025 6:35 PM IST
‘செப்டம்பர் மாதம் அதிக மழைப் பொழிவுக்கு வாய்ப்புள்ளது’ – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


