டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய 3 நகரங்களை இணைத்து “தெற்கு அதிவேக முக்கோணம்” என்ற பெயரில் புதிய திட்டம் உருவாக்கப்படும் எனக் கூறினார். இத்திட்டம் மூலம் தென்மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகள் பயன் அடையும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


