சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கேரளாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல உணவகச் சங்கிலியான சீசெல் உணவகங்களுடன் தொடர்புடையதாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் ஆழ்வார்பேட்டை, வேளச்சேரி, காண்டாஞ்சாவடி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் உள்ள சீசெல் கிளைகளிலும் வருமானவரி துறை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

