இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதேபோல, மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து குஜராத்தின் வதோதரா மற்றும் பிகாரின் பாட்னா விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
மும்பை பெருநகர மாநகராட்சி (பிஎம்சி) தலைமையகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, போலீசார் கட்டடத்தை சோதனையிட்டனர் மற்றும் “சந்தேகத்திற்கிடமான பொருள்கள் எதுவும்” கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அச்சுறுத்தலைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோன்று செவ்வாய்கிழமை மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனை, ரஹேஜா மருத்துவமனை, செவன் ஹில் மருத்துவமனை, கோஹினூர் மருத்துவமனை, கேஇஎம் மருத்துவமனை, ஜேஜே மருத்துவமனை மற்றும் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனை போன்ற 50 மருத்துவமனைகளுக்கு மருத்துவமனைகளின் படுக்கைகளுக்கு அடியிலும் குளியலறையிலும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.
தகவல் கிடைத்ததும், போலீஸ் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு மருத்துவமனைகளில் சோதனை நடத்தியது, ஆனால் சந்தேகத்திற்குரிய எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

