நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அதிக இழப்புகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்றார்.
அனைத்து செந்தோசா கடற்கரைகளும் தற்போது தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டுள்ளன.
சில தன்னார்வத் தொண்டர்கள் இன்று காலை தெற்கு தீவு, செயின்ட் ஜான் தீவு மற்றும் லாசரஸ் தீவுகளுக்குச் சென்று எண்ணெய் கசிவு பாதித்துள்ளதா என்பதைப் பார்க்கச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட பூங்காக்கள், கடற்கரைகள் மற்றும் இயற்கை இருப்புப் பகுதிகளில் தற்போது தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, சுமார் 1,400 பேர் உதவ முன்வந்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் விரைவில் தூய்மைப்படுத்தப்படும் என்று கூறினார்.
பூங்கா, இயற்கைப் பாதுகாப்புப் பகுதியின் மீது அக்கறை வைத்திருக்கும் அனைவருக்கும் திரு லீ தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

