முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை முடித்துவைத்தது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணை முடியும் வரை அவர் எந்த அரசுப் பதவியும் ஏற்கக் கூடாது என அமலாக்கத்துறை வாதிட்டது. வழக்கு முடிய 15 ஆண்டுகள் ஆகலாம். அதற்காக, எந்த பதவியும் வகிக்க முடியாது என உத்தரவிட முடியாது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கத் தேவையில்லை எனக் கூறி செந்தில் பாலாஜியின் ராஜிநாமா தொடர்பாக தமிழக அரசு சமர்ப்பித்த ஆளுநர் மாளிகையின் செய்திக் குறிப்பை ஏற்று ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்துவைத்தது.

