Last Updated:
மத்திய உளவுத்துறை, டெல்லி செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் கோயில்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை, கோயில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மத வழிபாட்டுத் தலங்கள், வரலாற்றுப் பிரசித்திபெற்ற செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கண்காணிப்பின் கீழ் இவை தொடர்ந்து உள்ளதாகவும், அதன்படி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டப்பட்டு உள்ளதால் கோயிலும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மசூதி ஒன்றில் கடந்த 6-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழியாக இந்தத் தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது.
Feb 21, 2026 11:00 AM IST


