செங்கோட்டையன் பங்கேற்பு
சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த விருந்தில் பங்கேற்காத செங்கோட்டையன், இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். எடப்பாடி பழனிசாமியின் இருக்கைக்கு எதிரே, கைக்கு எட்டும் தூரத்தில் அமர்ந்திருந்தார் செங்கோட்டையன். தலைமை நிர்வாகிகளும், பொதுச் செயலாளரும் மட்டுமே பேசியதால், செங்கோட்டையன் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மாவட்ட செயலாளர்களுக்கான தகவலை, எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

