Last Updated:
இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அமெரிக்கா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த இஷான் கிஷன் – திலக் வர்மா இணை ஓரளவு ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 20 ரன்னிலும், திலக் வர்மா 16 பந்துகளில் 25 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த சிவம் துபே முதல் பந்திலேயே வெளியேற, இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 46 ரன்கள் என்ற நிலையில் தடுமாறியது.
ரின்கு சிங் 6 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் கேப்டன் சூர்ய குமார் யாதவ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணி தடுமாற்றத்திலிருந்து மீண்டது.
அக்சர் படேல் சூர்யகுமாருடன் ஓரளவு பார்ட்னர்ஷிப் அமைத்து 14 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக ரன்கள் சேர்த்த சூர்யகுமார் யாதவ், அரைச்சதம் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 161 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யகுமார் யாதவ் 4 சிக்சர், 10 பவுண்டரியுடன் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.


