உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. இன்றைய போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் யாராக இருப்பார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
நடப்பு உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றன. இதில் பாகிஸ்தான் அணி கனடா மற்றும் அயர்லாந்து உடனான போட்டியை தவிர்த்து, இந்தியா மற்றும் அமெரிக்காவுடன் நடந்த போட்டியில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
சூப்பர் 8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன. நேற்று தொடங்கிய சூப்பர் 8 சுற்று போட்டிகளில் அமெரிக்காவை தென்னாப்பிரிக்காவும், வெஸ்ட் இண்டீசை இங்கிலாந்து அணியும் வீழ்த்தியுள்ளன.
இந்நிலையில் இன்று ஆசிய அணிகளான இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி தொடங்கவுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகிய 11 வீரர்கள் களம் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டி நடைபெறும் பார்படாஸ் மைதானத்தில் முதல் போட்டியின் சராசரி 158 ரன்கள். முதலில் பேட்டிங் செய்த அணி 70 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இங்கு டாஸ் வின் பண்ணும் அணியின் கேப்டன்கள் பெரும்பாலும் பேட்டிங்கை தேர்வு செய்வார்கள்.
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இந்த ஆடுகளம் அமையும். 67 சதவீத விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர். வானிலையை பொருத்தளவில் நாளை இங்கு சுமார் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். அத்துடன் மிக லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
&w=750&resize=750,375&ssl=1)
