Last Updated:
2026 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
ஆண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி முதன் முதலாக 2007 ஆண்டு துவங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 9 முறை ஆண்கள் 20 ஓவர் (T20) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. தற்போது நடைபா ஆண்டு 10-வது உலகக்கோப்பை போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
2007 முதல் நடைபெற்ற இந்த தொடர்களில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தலா 2 முறையும், பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 1 முறையும் கோப்பையை வென்றுள்ளன. தற்போது நட்பாண்டு லீக் சுற்று முடிவடைந்து, சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. யாரும் எதிர்பாராத விதமாக ஜிம்பாபே அணி ஆஸ்திரேலியா அணியை சாய்த்தது. பின்ன தொடர் தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலியா அணி வரலாற்றில் இரண்டாவது முறையாக லீக் சுற்றியிலேயே வெளியேறியது. சூப்பர் ஹிட் சுற்றுக்கு தகுதி பெற்ற எட்டு அணிகள் விளையாடி வருகிறது.
சூப்பர் ஹிட்ஸ் இந்தியா தென்னாப்பிரிக்கா மோதிய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவை சாய்த்தது. இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லீக் சுற்றுகளில் தொடர் வெற்றியைக் கண்டு தற்போது தோல்வியுற்றது ரசிகர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஜிம்பாவே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்(west indies) அணியிடம் மோத உள்ளது. இந்த இரு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழலில் இந்தியா உள்ளது. போட்டிகளில் வெற்றி தோல்வி சகஜம் எனவும், இந்தியா மீண்டும் வலுவாக போட்டிகளில் வென்று கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து ; ” ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் தற்போது இந்திய மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஜிம்பாவே, மேற்கத்திய தீவுகள் ஆகிய அணியில் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சூப்பர் 8 சூப்பர் நடிப்பற்று வருகிறது. இதில் இந்திய அணிக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது தென்னாபிரிக்க அணி. இதிலிருந்து இந்திய அணி பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அந்த போட்டியில் செய்த தவறுகளை மீண்டும் திருத்திக் கொண்டு அடுத்த போட்டிகளுக்கு வலிமையாக அணியை கட்டமைத்து தயாராக வேண்டும்.
இந்திய அணியில் சரியாக செயல்படாத வீரர்களை தூக்கி விட்டு நல்ல வீரர்களை களம் இருக்கலாம். (எ.கா: சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல்) விளையாட்டு என்றால் வெற்றி தோல்வியில் சகஜம் தான். இது இந்திய அணிக்கு இது ஒன்றும் புதிதல்ல இஷான் கிஷன், திலக் வருமா, சூரியகுமார் யாதவ், இவர்கள் பேட்டிங்கில் வலு சேர்க்க வேண்டும். இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் மிகவும் முக்கியமான ஆட்டங்கள். அனைத்துப் போட்டியிலும் பெற்றே தீர வேண்டும். இந்திய அணி மீது நம்பிக்கை உள்ளது நிச்சயம் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை வெல்லும்” என்கின்றனர் ரசிகர்கள்.
Feb 25, 2026 11:11 AM IST

