சுழிபுரத்தில் எந்தவிதமான சுற்றுலாத்துறை அபிவிருத்தியும் செய்ய வேண்டாம் என கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று(30.01) நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சுழிபுரம் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இயங்கும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளே மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
கடற்தொழிலுக்கு பாதிப்பு
சுற்றுலாத்துறை அபிவிருத்தி என்ற பெயரில் சுழிபுரம் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்படும் வேலை திட்டங்கள் காரணமாக
தமது கடற்றொழில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

