ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதன் மூலம், அங்கு ஆளுநர் ஆட்சி முடிவுபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அடிப்படையில் அரசு நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில், அங்கு சமீப நாட்களாக தொடர்ந்து பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையேயான சண்டைகள் நடந்துவருகின்றன. நேற்று (2ம் தேதி) கஹன்யார் பகுதியில் பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கிவந்த லக்ஷர் இ தொய்பா அமைப்பின் உயர் தளபதியான உஸ்மான் பாய் என்பவர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து அங்கு இது தொடர்பாக விசாரணையும் நடைபெற்றுவருகிறது.
அந்தத் தாக்குதல் சம்பவத்தில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள லர்னோ பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர், சண்டே மார்க்கெட் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஸ்ரீநகர் பகுதியில் உள்ள சண்டே மார்க்கெட் என்பது பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்று. சுற்றுலா உள்ளூர் வாசிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இந்தச் சந்தையை பயன்படுத்துவர்.
இந்நிலையில், அங்கு இன்று காலை தாக்குதல் நடந்திருக்கிறது. இந்தத் தாக்குதலில், பொதுமக்கள் 10 பேர் காயமடைந்தனர். இதில், காயமடைந்தவர்கள், SHMS மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிய காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நால்வருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள் :
சனாதனத்தை பாதுகாக்க ஜனசேனாவில் ‘நரசிம்ம வாராஹி படை’ – பவன்கல்யாண் புதிய முடிவு
நேற்றே தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, ஆட்சி அமைத்த பிறகு என்கவுண்டர்கள் அதிகரித்திருப்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
அதேபோல், இன்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவரான ஃபரூக் அப்துல்லா, “ஆட்சி அமைவதற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே யார் இதனை செய்கிறார்கள் என்பதை கண்டறிய தனிச்சையான ஒரு விசாரணை அமைப்பு வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
