கோடை காலங்களில் இயல்பாகவே தட்ப வெப்ப நிலை அதிகமாக இருப்பதால், மக்கள் அதிகம் தர்பூசணி, இளநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை பயன்படுத்த தொடங்குவதால் இவற்றின் விற்பனை அதிகரிக்கும். மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை காலத்தில் கடுமையான வெப்பக்காற்று மிகுந்த வானிலை 10 முதல் 20 நாட்கள் வரை நீடிக்கும்.
இந்த சமயத்தில் தர்பூசணி மற்றும் இதர நீர் பழங்களின் விற்பனை அதிகரித்தாலும் தற்போதே தேனி மாவட்டத்தில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல், மே மாதங்களுக்கு முன்பே மார்ச் மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மதிய வேளைகளில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது.
இதனால் தேனி மாவட்டத்தில் கம்பம் சின்னமனூர், கூடலூர் மற்றும் மாவட்டம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் தர்பூசணி விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால், தர்பூசணி வியாபாரிகள் சாலை ஓரங்களில் கடைகளை போட்டு வியாபாரம் நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி வியாபாரிகள் திண்டிவனம் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து தர்பூசணி இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
கிலோ 25 ரூபாய்க்கும், மொத்தமாக விற்கும்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை ஆவதாக கூறுகின்றனர். சில்லரை விற்பனையில் ஒரு பீஸ் தண்ணீர் பழம் பத்து ரூபாய்க்கு விற்பனை ஆவதாகவும் கூறுகின்றனர்.
தற்போதை கோடை காலம் தொடங்கி விட்டதால் , தர்பூசணி விற்பனை கம்பம் சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூடு பிடித்துள்ளது என்கின்றனர் தர்ப்பூசணி வியாபாரிகள்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…