சீமான், டிஐஜி வருண்குமார் குறித்து சமூக வலைதளங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் அவதூறாகப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் நான்கில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு தொடர்ந்து விசாரணையில் உள்ளது. முன்னதாக, நீதிபதி விஜயா, சீமான் ஏப்ரல் 8 அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். அன்று சீமான் மற்றும் டிஐஜி வருண்குமார் இருவரும் ஆஜராகி, வழக்கு தொடர்பான ஆவணங்களை சீமான் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

