Last Updated:
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் சீன விவகாரம் குறித்து பேச ஏன் தடுக்கிறீர்கள் என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, இந்தியா – சீனா இடையே என்ன நடந்தது, அதற்கு பிரதமர் என்ன எதிர்வினையாற்றினார் என்பதை தான் பதிவு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2வது நாளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனே பற்றிய கட்டுரையை குறிப்பிட்டு இந்தியா – சீனா இடையிலான உறவு குறித்து கேள்விகளை எழுப்பினார்.
மேலும், குடியரசுத் தலைவரின் உரையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சீனா, பாகிஸ்தான் உடனான உறவு முக்கியத்துவம் பெற்றிருந்ததாக கூறிய ராகுல் காந்தி, முன்னாள் ராணுவத் தளபதியின் கட்டுரை பிரதமரை குறித்து பேசுவதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச அரங்கில் அமெரிக்கா – சீனா இடையே பிரச்சனை நிலவி வரும் சூழலில், இந்தியா எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
மேலும், கைலாஷ் மலைப்பகுதியில் சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே என்ன நடந்தது, அதற்கு பிரதமர் மோடி என்ன எதிர்வினையாற்றினார் என்பதை பதிவு செய்ய விரும்புவதாக தெரிவித்த ராகுல் காந்தி, அதுகுறித்து பேச ஏன் தடுக்கிறீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிபணிந்து விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக குடியரசுத் தலைவரின் உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்த ராகுல் காந்தி, எப்ஸ்டீன் ஃபைல்ஸ் விவகாரத்திலும், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்திலும் உள்ள அழுத்தம் குறித்து மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
Delhi,Delhi,Delhi
Feb 03, 2026 12:28 PM IST


