இந்நிலையில் சீனாவுக்கு செல்ல இருந்த ஏழு ரஷ்ய கச்சா எண்ணெய் கப்பல்கள் திடீரென திசைமாற்றப்பட்டிருக்கிறது. தற்போதைய சந்தை தேவைக்கு ஏற்ப அவை நம் நாட்டு துறைமுகங்களை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளன.

சமீபத்தில் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்திருந்த நிலையில், தற்போது அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து, மீண்டும் ரஷ்ய எண்ணெயை அதிகமாக கொள்முதல் செய்யத் தொடங்கி இருக்கிறது.
இந்தியா தவிர ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கத் தொடங்கியிருப்பதால் அதன் விலை விரைவில் உயரக் கூடும் எனும் கூறப்படுகிறது.
