Last Updated:
ட்ரோன் இறங்குதளங்களில் இருந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் பொருட்களை ட்ரோன்களில் ஏற்றி கப்பல்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
சீனாவில் கப்பல்களுக்கு டிரோன் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹூபேய் மாகாணத்தில், யாங்சே ஆற்றில் அணைகளை கடக்க காத்திருக்கும் கப்பல்களுக்கு, அன்றாட தேவையான பொருட்கள், அவசரப் பொருட்கள் உள்ளிட்டவற்றை குறைந்த உயரத்தில் பறக்கும் ட்ரோன்கள் மூலம் வழங்கும் சேவை, பல மாத சோதனை ஓட்டங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.
#WATCH | சீனாவில் கப்பல்களில் உள்ளோருக்கு டிரோன் மூலம் பொருட்கள் விநியோகிக்கும் பணி தொடக்கம்…வெளியே சென்று பொருட்களை வாங்குவது சிரமமாக உள்ள நிலையில் நடவடிக்கை#China #DroneDelivery #News18TamilNadu pic.twitter.com/KjeIAAWYkp
— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 29, 2026
ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் இறங்குதளங்களில் இருந்து, தொழில்நுட்ப நிபுணர்கள் பொருட்களை ட்ரோன்களில் ஏற்றி கப்பல்களுக்கு அனுப்பி வருகின்றனர். கப்பலில் உள்ள பணியாளர்கள் செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். விரைவாகவும், எளிதாகவும் பொருட்கள் கிடைப்பதால், இந்த சேவையை விரிவுபடுத்த கோரிக்கைகள் எழுந்துள்ளன.


