10 லட்சம் பேர்
இதன்படி, யூஹுவான், வென்லிங் நகரங்களில் கனமழை பெய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஷாங்காய் நகரில் ரெட் அலர்ட் விடப்பட்டு உள்ளது. சூறாவளியை முன்னிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஷாங்காய் நகரில் 80 சதவீத விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், மொத்தம் 2,230 விமான சேவை ரத்து செய்யப்பட்டதுடன், நாளை (திங்கட்கிழமை) 720-க்கும் மேற்பட்ட விமான சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஹாங்சவ் ஜியாவ்ஷான் சர்வதேச விமான நிலையம், 500-க்கும் மேற்பட்ட விமானங்களை இன்று தரையில் நிறுத்தி வைத்தது.
44 விமான நிலையங்கள்
நாளைக்கான 180-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஜெஜியாங் மாகாணத்தில் நிங்போ லிஷே மற்றும் வென்ஜவ் லாங்வான் விமான நிலையங்களில் இன்று எந்த விமானமும் இயக்கப்படவில்லை. இன்று முதல் புதன்கிழமை வரை 44 விமான நிலையங்கள் சூறாவளியால் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்ஜிங், ஹெபய் மற்றும் ஊகான் நகரங்களிலும் விமான சேவை நாளை முதல் பாதிக்கப்படும்.
இதேபோன்று, ஷாங்காய் நகரில் ரெயில் சேவையும் பாதிப்படைந்து உள்ளது. நடப்பு ஆண்டில் சக்தி வாய்ந்த சூறாவளியாக இது இருக்கும். இதனால், நீண்டநேர மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவை ஏற்படும் ஆபத்து உள்ளது. கடந்த மாதம் சீனாவை தாக்கிய பவி சூறாவளியை விட 40 மடங்கு அதிக மழைப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது.
