அதோடு சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.இந்த பிரச்னையால் சீனாவில் துறைமுகம் வரை வந்துள்ள சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கப்பலில் ஏற்றப்படாமல் துறைமுகத்தில் முடங்கி கிடக்கிறது. அதற்கு சீனா அரசு ஒப்புதல் கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் தான் சீனா மற்றும் இந்திய அதிகாரிகள் சந்தித்து பேசி மீண்டும் இரு நாடுகளிடையே விமான போக்குவரத்து, வர்த்தக சேவையை தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. சீனாவில் ஆர்டர் செய்யப்பட்ட மூன்று இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவிற்கு வந்திருக்கவேண்டும். ஒரு இயந்திரம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வந்திருக்கவேண்டும்.
ஆனால் எந்த வித காரணத்தையும் சொல்லாமல் சீனா அரசாங்கம் இந்த இயந்திரங்களை இந்தியாவிற்கு அனுப்ப அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் இப்பிரச்னையை ரயில்வே நிர்வாகம் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கொண்டு செல்ல திட்டமிட்டு இருக்கிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மட்டுமல்லாது கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இயந்திரங்களுக்கு தேவையான உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய தூதரக மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுவிட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அடுத்த சில மாதங்களில் சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் மும்பை வந்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டாலும் முதல் கட்டமாக குஜராத் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் புல்லட் ரயிலை இயக்க தேசிய அதிவிரைவு ரயில் கழகம் முடிவு செய்துள்ளது.

