Last Updated:
ஒவ்வொரு ரோபோவுக்கும் வாழ்நாள் முழுவதும் அடையாளம் காணக்கூடிய வகையில், தனித்துவமான பார்-கோட் மற்றும் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.
சீனாவில் மனிதர்களைப் போல இரண்டு மாதங்கள் தீவிரப் பயிற்சி பெற்று, நான்கு ரோபோக்கள் பட்டம் பெற்ற சம்பவம் உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹங்சோ ரோபோ பள்ளியில், ரோபோக்களுக்கு செய்முறைப் பயிற்சிகள், நிஜ உலகத் தொழில்துறைச் சூழல்களில் ரோபோட்டிக்ஸை ஒருங்கிணைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதில், தற்போது இரண்டு வழிகாட்டி ரோபோக்கள், ஒரு ஆய்வு ரோபோ மற்றும் ஒரு பியானோ வாசிக்கும் ரோபோ என நான்கு ரோபோக்கள் வெற்றிகரமாகத் தங்கள் படிப்பை முடித்துப் பட்டம் பெற்றுள்ளன. ஒவ்வொரு ரோபோவுக்கும் வாழ்நாள் முழுவதும் அடையாளம் காணக்கூடிய வகையில், தனித்துவமான பார்-கோட் மற்றும் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.
மேலும், பட்டம் பெற்ற இந்த ரோபோக்கள் இனி நேரடியாக வேலைக்குச் செல்லவுள்ளன. அதன்படி, ஆய்வு ரோபோ தொழிற்சாலைக்கும், வழிகாட்டி ரோபோக்கள் கலைக் காப்பகத்திற்கும் பணிக்குச் செல்லும் நிலையில், பியானோ ரோபோ இசை நிகழ்ச்சி நடத்த தென் கொரியாவுக்குப் பயணமாகிறது.

