[ad_1]
சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சீனா அமெரிக்காவுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாக பேசியுள்ளார், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அத்துடன் சீனாவின் சுதந்திரத்துக்காக ரத்தம் சிந்திய அமெரிக்கர்கள் நினைவுகூறப்படுவார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்த அவரது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில், “கொஞ்மும் நட்பில்லாத அந்நியப்படையெடுப்பிலிருந்து சீனாவின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக மிகப் பெரிய அளவில் அமெரிக்கர்கள் ரத்தம் சிந்தி அளித்த ஆதரவை சீன அதிபர் குறிப்பிடுவாரா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.

சீனாவின் வெற்றிக்காகவும் மகிமைக்காகவும் பல அமெரிக்கர்கள் மரணமடைந்துள்ளனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் சரியான முறையில் கௌரவிக்கப்படுவார்கள், நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன்!” என எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.