சென்னையில் டீக்கடைகளில், டீ, காபி, பால் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு தேநீர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும், காபி விலை 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கப் டீ, 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், பால் 12 ரூபாயில் இருந்து 15 ரூபாயாகவும், காபி 15 ரூபாயில் இருந்து 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


