• Login
Tuesday, January 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

சிலாங்கூரில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலா RM150 கல்வி உதவித்தொகை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
January 13, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
சிலாங்கூரில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்குத் தலா RM150 கல்வி உதவித்தொகை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிள்ளான்:

சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 944 பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 943,975 மாணவர்கள் தலா RM150 மதிப்பிலான பள்ளித் தொடக்கக்கால உதவித் தொகையைப் (BAP) பெறத் தகுதி பெற்றுள்ளனர். இதற்காக அரசாங்கம் மொத்தம் RM141,596,250 நிதியை ஒதுக்கியுள்ளது.

புதிய கல்விச் செஷன் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று முதல் 30 நாட்களுக்குள் மாநிலத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த நிதி விநியோகிக்கப்படும் எனச் சிலாங்கூர் கல்வித் துறை இயக்குநர் வான் நூர் ஆஷிகின் அபு காசிம் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாணவனும் தனது கல்வி ஆண்டைத் தடையின்றித் தொடங்குவதை உறுதி செய்ய அரசாங்கம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

நிதி மேலாண்மை விதிகளின்படி இந்த உதவித்தொகை முறையாக மாணவர்களுக்குச் சென்றடைவதை மாவட்டக் கல்வி அலுவலகங்கள் (PPD) உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.எம்.கே மேரு (SMK Meru) பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொண்டு 10 மாவட்டக் கல்வி அலுவலகப் பிரதிநிதிகளிடம் இதற்கான காசோலைகளை வழங்கினார்.

“சிலாங்கூர் பட்ஜெட் 2026-இல் கல்வித் துறைக்காக RM55 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது சிலாங்கூர் மாநில வரலாற்றிலேயே கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்சத் தொகையாகும். மாநிலத்தின் உண்மையான பலம் அதன் மனித வளமே ஆகும். உயர்தரமான மனித ஆற்றலை உருவாக்கக் கல்வித் துறையை வலுப்படுத்துவது அவசியம். பொதுப் பயிற்சி வகுப்புகள் (Tuition) மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பப் புதிய கல்வி முன்னெடுப்புகளையும் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது”.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றினால் பாதிக்கப்பட்ட எஸ்.எம்.கே மேரு பள்ளிக்கு, மந்திரி பெசார் கார்ப்பரேஷன் (MBI Selangor) சார்பில் RM20,000 பேரிடர் நிவாரண நிதியையும் அமிருடின் ஷாரி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

ஆதரவு VS எதிர்ப்பு.. பொருளாதார நெருக்கடி எதிரொலி.. ஈரானில் வலுக்கும் போராட்டங்கள்..! | உலகம்

Next Post

சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்!

Next Post
சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்!

சத்தியாக்கிரக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த விமல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin