• Login
Friday, July 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சிறைச்சாலைகளில் இட நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சிறைச்சாலைகளில் இட நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சிறைச்சாலைகளில் இட நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு

சிறை நெரிசலைக் கையாள தொழில்நுட்ப ரீதியிலான மாற்றாக ‘வீட்டுக்காவல்’ முறையைச் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.

இலங்கையில் சிறைச்சாலை இட நெரிசலைக் குறைக்கும் நோக்கில், கைதிகளுக்கு வீட்டுக்காவல் (house arrest) போன்ற தொழில்நுட்ப ரீதியிலான மாற்று வழிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புகொடவில் புதிய நீதிமன்ற வளாகத்தை இன்று வெள்ளிக்கிழமை (24) திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் சிறைச்சாலைகளில் 10,375 கைதிகளுக்கே இடவசதி உள்ள போதிலும், தற்போது அதைவிட நான்கு மடங்கு அதிகமானோர் அங்கு அடைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டார்.

சிறை நெரிசலைக் கையாள தொழில்நுட்ப ரீதியிலான மாற்றாக ‘வீட்டுக்காவல்’ முறையைச் செயல்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. இதற்கான சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தகுதியான வழக்குகளில் சிறைத் தண்டனைக்கு மாற்றாக இது அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிறைகளில் விளக்கமறியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவுபடுத்துவது அவசியம். இந்த அறிக்கைகளில் ஏற்படும் தாமதமே சிறை நெரிசலுக்கு முக்கிய காரணமாகும். அறிக்கைகளை விரைவாகப் பெறுவதன் மூலம் விளக்கமறியல் கைதிகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்தத் திணைக்களம் மாதத்துக்கு 1,500 முதல் 2,000 அறிக்கைகளை வழங்கும் வகையில் அதன் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையின் நீதித்துறையில் நிலுவையிலுள்ள வழக்குகளைக் குறைப்பது ஒரு பெரும் சவாலாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் ஒரு மில்லியன் மக்களுக்கு 40 முதல் 60 நீதிபதிகள் இருக்கும் வேளையில், இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு 10 நீதிபதிகளே உள்ளனர். இந்த நிலையை மாற்றவும், குறிப்பாக கொழும்பில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் மேலதிக நீதிமன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

சுமார் 882.5 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய புகொட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் சட்ட உதவி மையம் உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வளாகம் ‘ஈ-கோர்ட்’ (e-Court) டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் நவீன மின்னணு வழக்கு மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளது.

சிறைத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், நீதித்துறையை நவீனப்படுத்துவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து பாடுபடும் என்று அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மேலும் தெரிவித்தார்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

வங்கதேச ஜனாதிபதி திடீர் ராஜினாமா.. பிரதமர் தாரிக் ரஹ்மானுடனான மோதலால் பதவி விலகல் | Bangladesh President Mohammed shahabuddin resigns

Next Post

இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்க வரி – அமெரிக்கா அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

Next Post
இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்க வரி – அமெரிக்கா அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு புதிய சுங்க வரி - அமெரிக்கா அறிவிப்பு | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin