சிறைக் கைதிகள் மத்தியில் அடிப்படைவாத கருத்துகள் பரப்பப்படும் போக்கு அதிகரித்து வருவது, இந்தியா மட்டுமன்றி உலக அளவில் ஆபத்தான சவாலாக உருவெடுத்துள்ளது. சமூகத்தில் இருந்து விலகிய உணா்வு, வன்முறை நடத்தை, சமூக விரோத மனப்பான்மை காரணமாக, சிறைக் கைதிகள் எளிதாக அடிப்படைவாத கருத்துகளுக்கு உள்பட்டுவிடக் கூடும். இத்தகைய கருத்துகளால் மூளைச்சலவை செய்யப்படும் கைதிகள், சில நேரங்களில் சிறைப் பணியாளா்கள் மீதோ, சக கைதிகள் மீதோ, வெளி நபா்கள் மீதோகூட வன்முறையில் ஈடுபடலாம் அல்லது தாக்குதலுக்கு திட்டமிடலாம்.

