இந்தியா முழுவதும் அதிகம் பேர் விரும்பி உண்ணும் உணவாக மோமோஸ் உள்ளது. இதனை தெரிந்துகொண்ட ஒருவர் அதற்காக ஒரு நிறுவனத்தையே உருவாக்கி இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளார். அவரை பற்றி நாம் தெரிந்துகொள்ளலாமா. இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமான மற்றும் அனைவராலும் விரும்பி உண்ணப்படும் தெருவோர உணவுகளின் பட்டியலில் மோமோஸும் ஒன்று. மோமோஸை இத்தனை பேர் ரசித்து உண்பதை புரிந்து மிகப்பெரிய தொழில் வாய்ப்பு உள்ளதை அறிந்து கொண்டார் சாகர் தர்யானி. அதனால் அதனை கொண்டே இந்தியா முழுவதும் வாவ் மோமோ என்ற நிறுவனத்தை உருவாக்கினார்.
கொல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பின் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த சமயத்தில், தனது வகுப்பு நண்பரான பினோத் ஹோமாகாய் உடன் இணைந்து, ஆகஸ்ட் 29, 2008 அன்று வாவ் மோமோவை நிறுவினார் தர்யாணி. கொல்கத்தாவில் ஒரு சிறிய தள்ளுவண்டியில் தொடங்கப்பட்ட மோமோஸ் கடையை, தங்களது எளிய யோசனை மூலம் வெற்றிகரமான வணிகமாக மாற்றினர். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, 21 வயதில், தர்யாணி தன்னிடம் இருந்த சிறிய தொகையான ரூ.30,000 பணத்தை முதலீடு செய்து, 1 டேபிள் மற்றும் 2 பகுதி நேர சமையல்காரர்களை வைத்து இன்று ரூ.2000 கோடி நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இதையும் படிக்க:
இரண்டு மாத மின்கட்டணம் ரூ.20 லட்சம்… அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்.!
Wow Momo என்ற இதன் தனித்துவமான பெயர் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வைக்கப்பட்டது. இவர்களது வலுவே உணவில் செய்யும் புதுமையான பரிசோதனை முயற்சிகளே. இதன் நிறுவனர்கள் ஆரம்ப காலங்களில் வாடிக்கையாளர்களின் கருத்துக்களைத் நன்கு கவனித்து உடனுகுடன் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்தனர். இவர்களது வெற்றிக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
இதையும் படிக்க:
தனது குட்டியைக் காப்பாற்ற மனிதர்களிடம் உதவி கேட்கும் சிறுத்தை… இதயத்தை உருக வைக்கும் வீடியோ!
தற்போது இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக சுமார் 250 கடைகள் உள்ளது. கூடியவிரைவில் இதை 350-ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
.
&w=750&resize=750,375&ssl=1)
