• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

சிறந்த ஃபினிஷர் யார்? – தோனியுடன் ராகுலை ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் கிண்டல் | Rajnath Singh draws MS Dhoni parallel to taunt Rahul Gandhi

GenevaTimes by GenevaTimes
April 6, 2024
in இந்தியா
Reading Time: 5 mins read
0
சிறந்த ஃபினிஷர் யார்? – தோனியுடன் ராகுலை ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் கிண்டல் | Rajnath Singh draws MS Dhoni parallel to taunt Rahul Gandhi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


போபால்: இந்திய கிரிக்கெட் வீரர் தோனியைப் போலவே ராகுல் காந்தியும் இந்திய அரசியலில் மிகச்சிறந்த ‘ஃபினிஷர்’ என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டலடித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய ராஜ்நாத் சிங், “சிலநேரம் ஏன் இப்படி நடக்கிறது என்று நான் யோசிப்பதுண்டு. அப்போது நான் ஒரு முடிவுக்கு வருவேன். கிரிக்கிட்டில் சிறந்த ஃபினிஷர் யார்? மகேந்திர சிங் தோனி. அதே போல இந்திய அரசியலில் சிறந்த ஃபினிஷர் யார் என்று யாராவது என்னிடத்தில் கேட்டால், நான் ராகுல் காந்தி என்று சொல்வேன். அதனால் தான் பல தலைவர்கள் காங்கிரஸை விட்டுச் சென்று விட்டனர். காங்கிரஸ் கட்சியை ‘ஃபினிஷ்’ செய்யும்வரை ஓயமாட்டேன் என்று ராகுல் சபதம் ஏற்றுள்ளார்.

பிரதமர் மோடி, நாட்டு மக்களை பல்வேறு இன்னல்களிலிருந்து பாதுகாப்பதற்காக உத்தரவாதங்களை தந்துகொண்டிருக்கும் வேளையில் எதற்கும் உதவாத எதிர்கட்சிகள் வெறுப்பை பரப்பி வருகின்றனர். பாஜக தனது தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகிறது. நாங்கள் ராமர் கோயில் கட்டப்படும் என்று கூறியபோது எங்களை கிண்டலடித்தனர். ஆனால் அது கட்டப்பட்டது.

ஆட்சியில் இருக்கும்போது காங்கிரஸ் கட்சி பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றையெல்லாம் நிறைவேற்றி இருந்தாலே இந்தியா எப்போதோ வலிமையான நாடாக மாறியிருக்கும். ஆனால் இன்னொரு பக்கம் பாஜக பத்தே ஆண்டுகளில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளது” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.



Read More

Previous Post

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை திருத்தியது பிரித்தானியா

Next Post

RR vs RCB | கோலி சதம் வீண்: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி! | Rajasthan Royals win by 6 wickets vs RCB

Next Post
RR vs RCB | கோலி சதம் வீண்: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி! | Rajasthan Royals win by 6 wickets vs RCB

RR vs RCB | கோலி சதம் வீண்: ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி! | Rajasthan Royals win by 6 wickets vs RCB

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin