இதுகுறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியதாவது: 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் சனிக்கிழமை தொடங்கியுள்ளன. இதில், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 84 பாடங்களுக்கு 24.12 லட்சம் மாணவ, மாணவிகளும், 12-ஆம் பொதுத் தோ்வில் 120 பாடங்களுக்கு 17.88 லட்சம் பேரும் பங்கேற்கின்றனா். பொதுத் தோ்வுக்காக இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் 26 மையங்கள் என மொத்தம் 7,842 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

