Last Updated:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக M.A. பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளராக M.A. பேபி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது தேசிய மாநாடு, மதுரையில் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக கேரளாவைச் சேர்ந்த M.A.பேபி தேர்வு செய்யப்பட்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரி காலமான நிலையில், புதிதாக பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பேபி, கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தார். மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த பேபி, கேரள மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராகவும் செயலாற்றி உள்ளார்.
Wishing Comrade M. A. Baby the very best as he takes charge as the General Secretary of the CPI(M). From challenging the Emergency as a student leader to shaping Kerala’s education policy with a progressive vision, his journey reflects purpose and resolve.
The DMK looks forward… https://t.co/lNTAKeXJjD— M.K.Stalin (@mkstalin) April 6, 2025
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.ஏ.பேபிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், எமர்ஜென்சியை எதிர்த்து மாணவத் தலைவராக செயல்பட்ட எம்.ஏ.பேபி, அமைச்சராக கேரள மாநிலத்தின் கல்விக் கொள்கையை வடிவமைத்தவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மதச்சார்பின்மை, சமூகநீதி, கூட்டாட்சி உள்ளிட்டவற்றில் வலுவான உறவுகளை திமுக எதிர்நோக்குவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Madurai,Madurai,Tamil Nadu
April 06, 2025 6:06 PM IST


