Last Updated:
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக இந்தியா வியாழனன்று அறிவித்தது.
சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்களின் போது கூட நிறுத்தப்படாத சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. பாகிஸ்தானின் நீர்ப் பாசன தேவையில் 93 சதவீதம் தண்ணீர் சிந்து நதி ஒப்பந்தம் மூலம் கிடைக்கிறது. சிந்து நதி படுகையில்தான் 61 சதவிகித பாகிஸ்தானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் மீது இந்தியா அமைத்திருக்கும் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு விடுவிக்கப்படும் தண்ணீர் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தானின் பஞ்சாப், சிந்து மாகாணங்களில் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைக்கான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த அணைகளில் இருந்து இயற்கையாக பாய்ந்தோடும் ஆற்று நீர் ஓடிக் கொண்டிருக்கும் என்றும் தற்போது ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆறுகளின் குறுக்கே இந்தியா அணைகட்டி கொள்வதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளதாகவும் ஓய்வுபெற்ற கர்னல் ஜான் பிரின்ஸ் தெரிவித்துள்ளார்.
கோடை காலத்தில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் நேரத்தில் இந்தியா எடுத்துள்ள இந்த நடவடிக்கை பாகிஸ்தானுக்கும் பெரும் பின்னடவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்களின் போது கூட நிறுத்தப்படாத சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து நிறுத்தப்பட்டிருப்பது, பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனால் சிந்து நதி திட்ட நீர் விநியோகத்தை இந்தியா நிறுத்தியதை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதையும் படிங்க : சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்… வாகா எல்லையும் மூடல்
இந்த நிலையில் இதனை கண்டித்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அலுவலகம் எதிரே பாகிஸ்தானியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதே போன்று, கராச்சியிலும் இந்தியாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
April 25, 2025 11:28 AM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: பாகிஸ்தானில் இந்திய தூதரக அலுவலகம் முன்பு மக்கள் போராட்டம்!


