Last Updated:
சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம் குறித்து ஜல்சக்தி அமைச்சர் சிஆர் பாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தினர். பாகிஸ்தான் உலக வங்கியை அணுகினால், இந்தியா சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளும்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தப்பட்ட நிலையில், ஜல்சக்தி அமைச்சர் சிஆர்.பாட்டில் உடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார். இதில் ஜல்சக்தி துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜல்சக்தி துறை அமைச்சர் சிஆர் பாட்டில், சிந்துநதி நீரை முற்றிலுமாக நிறுத்துவது குறித்து ஆலோசித்ததாகக் கூறினார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காதபடி 3 திட்டங்களை உருவாக்க முடிவெடுத்துள்ளதாகவும், நீண்ட கால திட்டம், இடைக்கால திட்டம் மற்றும் குறுகிய கால திட்டம் என அவற்றை செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் உலக வங்கி முன்னிலையில் ஏற்படுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் உலக வங்கியை அணுகினால், அதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளவும் மத்திய அரசு தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
April 25, 2025 9:18 PM IST


