சிங்கப்பூரில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு தமிழ் ஊழியர்களுக்கு நிதி திரட்டப்பட்டது, வாரி வழங்கிய சிங்கப்பூர் மக்களுக்கு அவர்கள் தங்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் தங்களுக்கு ஒதுங்கிய பணத்தை குழந்தைகளின் கல்விக்காகப் பயன்படுத்தப் போவதாக ஊழியர்கள் கூறினர்.

கடந்த ஆக.10 ஆம் தேதி, மொத்தமாக S$70,805.05 வெள்ளிக்கான காசோலை ஏழு தமிழ் ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.
ஊழியர்களின் துணிச்சலான செயலை பாராட்டி அங்கீகரிக்கும் வகையில், அவர்களுக்காக நிதி திரட்டும் பணியை உள்ளூர் தொண்டூழிய அமைப்பான ItsRainingRaincoats ஏற்பாடு செய்தது.
குடும்பங்கள் பெருமை
இந்த வீர தீர செயலால் தமிழ்நாட்டிலுள்ள அவர்களின் குடும்பங்கள் பெருமை மற்றும் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக அவர்கள் கூறினர்.
சிங்கப்பூரர்களின் நேர்மை மற்றும் நட்புணர்வு குறித்து 32 வயதான கணேசன் வீரசேகர் குறிப்பிட்டார்.
பொதுமக்களிடம் இருந்து இவ்வளவு ஆதரவு வரும் என்பதை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்றும், மேலும் அவர் சிங்கப்பூரை தனது “இரண்டாவது தாயகம்” என்றும் கூறி மகிழ்ந்தார்.
பணத்தை என்ன செய்ய போறீங்க?
திரட்டப்பட்ட நிதியை எதற்காகச் செலவு செய்விங்க என்று கேட்டபோது, பெரும்பாலான ஊழியர்கள் அந்தப் பணத்தைத் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்ப போவதாகக் கூறினர்.
சிலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பயன்படுத்தப் போவதாகக் கூறினர்.
மேலும், 26 வயதுமிக்க அன்பழகன் வேல்முருகன் கூறுகையில், தனது கடனைத் திருப்பிச் செலுத்தப் இந்த பணத்தைப் பயன்படுத்த போவதாகக் சொன்னார்.
சிங்கப்பூரில் வேலை பெற வேண்டி ஏஜென்சி கட்டணமாக S$10,000 க்கும் அதிகமான தொகையை செலுத்தியதாக அன்பழகன் கூறினார்.
அவர் இதுவரை சிங்கப்பூரில் ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
வேலைவாய்ப்பு, சிங்கப்பூர் வட்டார செய்திகளை உடனே தெரிந்துகொள்ள Facebook, Instagram, Twitter, ShareChat மற்றும் Telegram பக்கங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

